எந்தன் சிலுவையை

 

எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு

உம் பாத சுவடுகள் பின் செல்லுவேன் (2)

எந்தன் சுயத்தை வெறுமையாக்கி -2

உந்தன் சித்தம் நான் செய்திடுவேன் -2

 

சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை

பாடுகள் இல்லையேல் ஆளுகையில்லை

எந்தன் கஷ்டங்களில் கண்ணீரின்பாதையில்

உந்தனை கண் நோக்கிடுவேன் -2

 

உந்தன் காயத்தின் தழும்புகளை

எந்தன் சரீரத்தில் தரித்துகொண்டேன் (2)

உந்தன் பாடுகளின் பாதைகளில்

விரும்பியே என்னை இணைத்துக்கொண்டேன் -2

 

எப்பக்கத்தில் நான் நெருக்கப்பட்டாலும்

ஒடுங்கி நான் ஒருபோதும் போவதில்லை (2)

கலக்கங்களில் மனம் முறியும் வேளையில்

சோர்ந்து நான் போவதில்லை -2

 

பொன்னைப்போல நான் புடமிடப்பட்டாலும்

உத்தமனென்று (உத்தமியென்று) விளங்கிடச்செய்யும் -(2)

சோதனையை எந்தன் சாதனையாக்குவீர்

ஜீவகிரீடம் சூடிடச்செய்வீர் -2